நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார் அர்ச்சுனா எம்.பி..
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி(இன்றையதினம்) கூட விலக தயாராக இருப்பதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்போம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சில தமிழ் அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகளால் தான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழினத்தை அழித்தவர்களுடன் அரசியல் இலாபத்திற்காக பல தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தெரிவானதிலிருந்து தான் பதவி விலகப் போவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசி பல சர்ச்சைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
