வைத்தியசாலை பாதுகாவலருடன் முரண்பட்ட அர்ச்சுனா!
யாழ்ப்பாணம் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பாதுகாவலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த காவலர், தன்னை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்ததாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பாதுகாவலரின் கையடக்க தொலைபேசியை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தன்னை எவ்வாறு காணொளி எடுக்க முடியும் எனவும் அர்ச்சுனா இதன்போது விவாதம் செய்துள்ளார்.
அதிகமான சர்ச்சைகள்
அத்துடன், குறித்த பாதுகாவலர் அந்த இடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது அர்ச்சுனா அவரை இடைமறிப்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri