தொல்பொருள் என்ற ரீதியில் தமிழ் பிரதேசங்கள் அபகரிப்பு: கோவிந்தன் கருணாகரம்

Poththuvil Easternprovince Lands Govinthankarunakaran
By Kanamirtha Feb 24, 2022 03:25 PM GMT
Report

கிழக்கில் இன்னும் அதிகமாகச் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கிலே இடம்பெற்று வரும் காணி அபகரிப்புக்கு எதிராக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுத்திருக்கின்றோம்.

வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களினால் வடக்கு, கிழக்கிலே தனியார் காணிகளும், எதிர்காலத்தில் அம்மக்களின் அபிவிருத்திக்காக இருக்கக்கூடிய அரச காணிகளும் மத்திய அரசினால் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாது வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களின் எல்லைப் புறங்களிலும் வெளி மாவட்ட சிங்கள மக்களைக் கொண்டு குடியேற்றும் திட்டமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழர் தாயகமாகக் கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் இணைந்திருந்த வடக்கு, கிழக்கை தற்காலிகமாகப் பிரித்தது மாத்திரமல்லாமல் அதனை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக மகாவலி தண்ணீர் செல்லாத இடத்தில் மகாவலி எல் வலயமென்று ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமைக்கின்றார்கள்.

அத்துடன் மணலாறு என்ற பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றி அதனை இன்னுமொரு சிங்கள மாவட்டத்துடன் இணைத்து வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கை விடக் கிழக்கில் இன்னும் அதிகமாகச் சிங்கள மக்களைக் கூடுதலாகக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கூடுதலாகத் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரங்களிலே சேனைப்பயிர்ச் செய்கை, மரமுந்திரிப் பயிர்ச்செய்கை என்ற போர்வையிலே இலங்கை அரசாங்கம் கிழக்கு ஆளுநர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் அனுசரணையுடன் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த எல்லைப் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அங்கு ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ளும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணிகள் கூட அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பால் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மாடுகளைப் பண்ணையாளர்கள் எதிர்காலத்தில் விற்கும் ஒரு நிலைமையைத் தான் இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அந்தப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்துவிடும். இதன் மூலம் அவர்களை மேலும் வறுமைக் கோட்டின் கீழ் இட்டுச் செல்லவே இந்த அரசாங்கம் முனைகின்றது.

எனவே இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் நடத்தும் காணி அபகரிப்புகளை உடன் நிறுத்த வேண்டும். தமிழர்களது குடிப்பரம்பலைக் குறைப்பதனை நிறுத்த வேண்டும். நீண்ட காலமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக நாங்கள் போராடிக்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையிலே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதற்கு இந்த அரசாங்கம் மட்டுமல்லாது சர்வதேசமும் இன்றைய ஆர்ப்பாட்டத்தைக் கருத்திற்கொண்டு தமிழர் பிரதேசத்திற்கு, வடக்கு,கிழக்கிற்கு, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களது அவா'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US