அர்ச்சுனா - சஜித் எம்பிகளுக்கிடையே சிக்கித் தவித்த சபாநாயகர்.. நாடாளுமன்றில் சலசலப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் ஒரே நேரத்தில் நிலையியல் கட்டளைகளை முன்வைத்ததால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய(12.09.2025) அமர்வில் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேச முற்பட்ட போது, அவரின் கேள்வி நிலையியல் கட்டளைச் சட்டத்திற்குள் வராது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
முக்கியமான பிரச்சினை
அத்துடன், சஜித் பிரேமதாச, பேச முற்பட்ட போதும் சபாநாயகர் அதனையே குறிப்பிட்டிருந்தார்.
எனினும், தான் கேட்க வந்த கேள்வி, கல்வி தொடர்பான பிரச்சினை எனவும் அது தேசிய மட்ட ரீதியில் முக்கியமான பிரச்சினை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, குறுக்கிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, எதிர்கட்சித் தலைவர் விவாதம் தொடர்பில் சரியான புரிதல் இல்லாமல் கதைப்பதாகக் கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




