மீண்டும் சபையில் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ள அர்ச்சுனா எம்.பி! நாடாளுமன்றில் கடும் குழப்பநிலை
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும், அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்பின்னரே சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு
அர்ச்சுனா எம்.பி எழுந்து, விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி கடுமையாக கூச்சலிட்ட நிலையில், பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எழுந்து விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து அர்ச்சுனா இராமநாதன் எம்.பி கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri