ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை
காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தயானந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று(26.09.2023)அவரை பிணையில் விடுவித்துள்ளது.
மட்டக்களப்பு கிராண் குளம் பகுதியில் கடந்த 20 வருடங்களாக விளையாட்டு கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி ஒன்றை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்தப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பெரும்பான்மை இனத்தவர் ஒருவரால் 20 வருடங்களுக்கு முன் விளையாட்டுக் கழக மைதானத்திற்காக குறித்த காணி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த காணியை அபகரித்துள்ளதாக கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபராக கருதப்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி முன்னாள் தவிசாளர் தயானந்தன், விளையாட்டுக்கழக காணிக்கு இடையூறாக உள்ளமையை நீதிமன்றுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எதிர்வரும் காலங்களில் குறித்த காணிக்குள் எவ்வித தலையீடும் செலுத்தக்கூடாது என்றும் ஏதாவது தலையீடு செய்தால் எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
