விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போது முன்பைவிட சிறப்பாக செயற்படுகிறது! உதய கம்மன்பில
இலங்கை அரசியலில் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதிகள், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்காமைக்கு காரணங்கள் உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் தமிழ் பிரிவினைவாதம் என்பது தோற்கடிக்கப்படவில்லை.
இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போது முன்பைவிட சிறப்பாக செயற்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை,