வவுனியா செட்டிகுளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை ஆரம்பம்
வவுனியா செட்டிகுளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் மது போதைகள், கிராமமட்ட வன் செயல்கள் அதிகரித்து காணப்படுவதனால் சிறுவர் மட்டத்திலிருந்து ஆன்மீக வழிபாடுகளையும் நல்லொழுக்கங்களையும் பேணிக் காக்கும் முகமாக நேற்று (28.07.2024) இந்த அறநெறி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சைவ மணி சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செட்டிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஆலக பிரதம குரு கோடீஸ்வர சிவாச்சாரியர் ஆசி உரை வழங்கிவைக்க தொடர்ந்து சிறப்புரையினை கலாநிதி தமிழ்மணி அகிளங்கன் ஆசிரியர் நிகழ்த்தினார்.
கருத்துரைகள்
அதனைத் தொடர்ந்து, கருத்துரைகளை போசிரியர் விஜிதரன் பீற்றர் பல்கலைக்கழக உரிமையாளர், மக்கள் சேவை மாமணி காந்தன், அகில இலங்கை சிவசங்க தலைவர் இராச மாதங்கி சுவாமிகள், செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர் தயாகரன், ஆசிரியர் சயிந்தன், அகில இலங்கை சற்சங்க தலைவர் சண்முகநாதன் ஆகியோர் நிகழ்த்த நிகழ்ச்சியினை கலாநிதி சிறீஸ்கந்தராசா தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மதகுருமார்கள் மற்றும் கல்விமான்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |