மட்டக்களப்பில் குளங்களில் பூத்துக்குலுங்கும் ஆற்றுவாழைத் தாவரங்கள்
மட்டக்களப்பிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நிரம்பியுள்ள நிலையில் குறித்த குளங்களில் ஆற்றுவாழைத் தாவரங்கள் பூத்துக் குலுங்குவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போரதீவு பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, பழுகாமம், கோவில்போரதீவு, பொறுகாமம், உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்களில் இவ்வாறு ஆற்றுவாளைத் தாவரங்கள் பூத்துக் குலுங்கி அக்குளங்களுக்கும் கிராமங்களுக்கும் அழகு சேர்க்கின்றன.
@tamilwinnews மனங்களை வருடும் குளங்கள் மட்டக்களப்பில் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Tamilwin #Lankasri #Baticaloa #beautiful #Nature #Naturebeauty ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
படையெடுக்கும் பறவைகள்
இதேவேளை பிரதான வீதி ஓரங்களில் இக்குளங்கள் அமைந்துள்ளதானல் வீதியில் பயணம் செய்யும் பொது மக்களும் பூக்கள் நிறைந்துள்ள குளங்களை பார்த்துச் செல்வதுடன், கானாங்கோழி உள்ளிட்ட பறவைகளும் குளங்களில் உலாவுவதையும் அவதானிக்க முடிவதாக தெரியவருகிறது.