இந்தியாவில் மேலுமொரு தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு, நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் (ஸிகோவ்)Zycov-D என்ற கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசியான Zycov-D,. 12 அகவை மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam