இந்தியாவில் மேலுமொரு தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு, நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் (ஸிகோவ்)Zycov-D என்ற கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசியான Zycov-D,. 12 அகவை மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri