தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கூறிய படி தென்னிலங்கையை அணுகுங்கள்..! விடுக்கப்பட்ட அழைப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கூறிய படி தென்னிலங்கையை அணுகுங்கள் என சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் அநுர அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் இணைந்து செயற்பட வேண்டும்.
அத்தோடு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அனர்த்த காலத்தின் போது மக்களுடன் இணைந்து அறத்துடனும், பண்புடனும் செயற்பட்டது போல தற்போதுள்ள ஆளும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |