துருக்கியின் உயர்ஸ்தானிகர் கலந்துக்கொண்ட பாராட்டு நிகழ்வு
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை நாட்டுக்குத் தேவையான நல்ல திறமையான ஆளுமைமிக்க இளைஞர்களை உருவாக்கி வருகின்றன என்று துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்பு டகுத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதி
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்பு டகுத் அவர்கள் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எல். தி. பி. தெஹிதெனிய அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவர்களுடன் இதன் போது முன்னாள் அமைச்சர் ஏ. எச். ஏ. பௌசி, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி, கல்வி அமைச்சின் முஸ்லிம் கல்விப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் நசுமுதீன், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. எம். நவவி, முன்னாள் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர்கள் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியச் செயலாளர் ஆஸ்ப் சுக்ரி, பொருளாளர் பிர்தௌஸ் உள்ளிட்ட எண்ணிக்கையிலான பிரமுகர்களுடன் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வை. எம். எம். ஏ. கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் திறமைகளைக் காட்டிய கிளைச் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்குதல், தேசிய மாவட்டத்தில் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருது சமூகச் செயற்பாட்டாளர் ஹில்ரு சித்தீக் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/9f35440d-d1fa-4f63-a347-06bffc73bbfc/24-66840170a2b4e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/524081cf-8443-408c-939f-45dcca930994/24-668401712e502.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/80bcfabc-edf0-4a43-a96b-dc9f8c5290fb/24-66840171ac32a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/209bc62e-0d96-4c4a-95bd-41767c98fe92/24-6684017235be5.webp)