கிழக்கு மாகாண ஆளுநரால் கோவிட் தடுப்பு விசேட செயலணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அம்பாறை மாவட்டம் - நிந்தவூரைச் சேர்ந்த ஆதம் பாசித் ஹுஸ்னி கிழக்கு மாகாண கோவிட் 19 விசேட செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திற்கான கோவிட் 19 செயலணியில் பேதியளவு முஸ்லீம் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை என்பதை கல்முனை தொகுதியின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் ,கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான ரிஸ்லி முஸ்தபா ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
ரிஸ்லி முஸ்தபாவின் இந்த கோரிக்கையைத் ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிழக்கு மாகாண கோவிட் 19 தடுப்பு விசேட செயலணியின் ஒருங்கிணைப்பாளராக லெப்டினன்ட் கேணல் டி. அனாஸ் அகமட் மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கான மாகாண கோவிட் 19 தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பாளராக நிந்தவூரை சேர்ந்த ஆதாம் பாசித் ஹுஸ்னி ஆகியோரை நியமிக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தரான பசித்
ஹுஸ்னி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கால்பந்து அணியின் கேப்டனும் ,நிந்தவூர் கென்ட் விளையாட்டு கழகத்தின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் நிந்தாவூர் இளைஞர் அமைப்பாளரும் ,திகாமடுல்ல மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க
பிரதேசத்துக்கான அபிவிருத்தி குழுவின் இணைப்பாளர் ஆவார்.