கொவிட்டை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் உயர் இராணுவ அதிகாரிகள் நியமனம்!
கொவிட்டை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் உயர் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கிரமப்படுத்தும் வகையில் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திரா சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு உயர் இராணுவ அதிகாரிகள் இணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல், பிரிகேடியர் மற்றும் கேணல் ஆகிய இராணுவத்தின் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளே இவ்வாறு மாவட்ட ரீதியான இணைப்புப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோரை போக்குவரத்து செய்தல், சிகிச்சை அளித்தல், மருந்துப் பொருள் விநியோகம், உலர் உணவுப் பொருள் விநியோகம், தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான இணைப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.