ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிப்பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஹரேந்திரன் நியமனம்
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிப்பணிப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கிருஸ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு ஊடகத்துறையில் தனக்கென தனியிடத்தை வகித்து வரும் ஹரேந்திரன் கொழும்பு,பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.சீ, ஜெர்மன் ரீ.வீ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களிலும் ஹரேந்திரன் பணியாற்றியுள்ளார்.
சமூக ஆர்வலராகவும், யோகா பயிற்றுவிப்பாளராகவும், ஆளுமை விருத்தி விரிவுரையாளராகவும் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஹரேந்திரன், இன்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவிற்கு பொறுப்பாளராகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.