ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நியமனம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தனது 27 வருட ஊடக வாழ்க்கையில், பிரபல அறிவிப்பாளராக சிறந்து விளங்கிய அவர், ஒரு முன்னணி இலத்திரனியல் ஊடக அலைவரிசையில் நிகழ்ச்சி முகாமையாளராகவும், பணிப்பாளராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் மற்றும் அலைவரிசையின் தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியராச்சி, அந்த பதவியில் இருந்து விலகி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.