காணாமல் போனோர் அலுவலக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு, உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலக சட்ட விதிகளின்படி இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையத்தளமான 'www.parliament.lk' இல் உள்ள தகவல் தாளின்படி 'OMP' க்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
நியமனம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசியலமைப்பு சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09 டிசம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது 'constitutionalcouncil@parliament.lk' என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
'OMP'க்கு உறுப்பினர்களின் நியமனம்' என்பது உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
