காணாமல் போனோர் அலுவலக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு, உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலக சட்ட விதிகளின்படி இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையத்தளமான 'www.parliament.lk' இல் உள்ள தகவல் தாளின்படி 'OMP' க்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
நியமனம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசியலமைப்பு சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09 டிசம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது 'constitutionalcouncil@parliament.lk' என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
'OMP'க்கு உறுப்பினர்களின் நியமனம்' என்பது உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
