புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் Apple நிறுவனம்
இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளை தாக்கிய கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் கட்டுமான உதவிகளை வழங்குவதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகள் கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் நன்கொடை
பாதிக்கப்பட்ட சமூகங்களை மீட்டெடுக்க உதவும் வகையில், நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு ஆப்பிள் நன்கொடை அளிக்கும் என அவர் அறிவித்துள்ளார்.
Storms across Thailand, Indonesia, Malaysia, and Sri Lanka have devastated communities. At Apple, we’re thinking of everyone affected, and will be donating to relief and building efforts on the ground.
— Tim Cook (@tim_cook) December 2, 2025
எனினும் அதற்காக செலவிடப்படவுள்ள நிதி விபரம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடவில்லை.