தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம்

Prime minister Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Kanamirtha May 09, 2022 01:26 PM GMT
Report

நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்குத் தென்பகுதி மக்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் வலியுறுத்தியுள்ளது.

“30-40 வருடங்களாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்களும் தற்போதைய முறையை மாற்றி அடக்குமுறைகளிலிருந்து விடுபட முயற்சித்து வருகின்றனர்.

இன்று தென்னிலங்கை மக்களும் அதே அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை நாம் ஆழமாகப் புரிந்துகொண்டு தமிழ் மக்களின் குரலுக்கு இடம் கொடுக்க வேண்டும் என கிறிஸ்தவ உழைக்கும் சகோதரத்துவ இயக்கக் குழு உறுப்பினர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து உரிமைகளை வென்றெடுக்க நாம் இருவரும் எங்கள் சொந்த அடையாளங்களுக்குள் ஒன்றாக நிற்க வேண்டும்.

இந்த நாட்டில் பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பு, வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்று கூறுகிறது.

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம் | Appeal To The Sinhalese People To Join Tamils

“ஆட்சியாளர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அந்த வாக்கைப் பயன்படுத்திய அதே மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள். எனவே இந்த ஆட்சியாளர்கள் அந்த மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அதிகாரம் இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையைச் சார்ந்துள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் ஏழை மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படுவது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிலங்கையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம், அதனை மேலும் பலப்படுத்துவதற்கு சில அரசியல் தலையீடுகள் தேவை என நம்புகிறது.

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம் | Appeal To The Sinhalese People To Join Tamils

இது தொடர்பில் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் கொழும்பு கிளையின் செயற்பாட்டாளர் ரோல்ஸ்டன் வைமன் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண விரும்புகிறோம். ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு நாடாளுமன்றமும் பதவி விலகுவதே ஒரே தீர்வு. பின்னர் அனைத்துக் கட்சிகளின், குறிப்பாக நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் பிரதிநிதித்துவத்துடன் இடைக்கால அரசாங்கத்திற்குச் செல்லுங்கள், இந்த பாரிய அரசியல் மோதலைத் தீர்க்கக் கூடிய வகையில் விரைவில் தேர்தலை நடத்துங்கள்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தென்னிலங்கை மக்கள் உணராததால், வடக்கு, கிழக்கு மக்களின் குரல்கள் இன்று காலிமுகத்திடல் மைதானத்தில் கேட்கவில்லை.

1971ஆம் ஆண்டு எழுச்சியின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களைப் பிரதமர் சிறிமாவோ விடுவிக்க வேண்டும் எனக் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் தெளிவாகக் கோரியிருந்தது, இன்றும் தமிழ் கைதிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US