தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம்

Prime minister Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Kanamirtha May 09, 2022 01:26 PM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்குத் தென்பகுதி மக்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் வலியுறுத்தியுள்ளது.

“30-40 வருடங்களாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்களும் தற்போதைய முறையை மாற்றி அடக்குமுறைகளிலிருந்து விடுபட முயற்சித்து வருகின்றனர்.

இன்று தென்னிலங்கை மக்களும் அதே அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை நாம் ஆழமாகப் புரிந்துகொண்டு தமிழ் மக்களின் குரலுக்கு இடம் கொடுக்க வேண்டும் என கிறிஸ்தவ உழைக்கும் சகோதரத்துவ இயக்கக் குழு உறுப்பினர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து உரிமைகளை வென்றெடுக்க நாம் இருவரும் எங்கள் சொந்த அடையாளங்களுக்குள் ஒன்றாக நிற்க வேண்டும்.

இந்த நாட்டில் பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பு, வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்று கூறுகிறது.

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம் | Appeal To The Sinhalese People To Join Tamils

“ஆட்சியாளர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அந்த வாக்கைப் பயன்படுத்திய அதே மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள். எனவே இந்த ஆட்சியாளர்கள் அந்த மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அதிகாரம் இன்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையைச் சார்ந்துள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் ஏழை மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படுவது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிலங்கையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம், அதனை மேலும் பலப்படுத்துவதற்கு சில அரசியல் தலையீடுகள் தேவை என நம்புகிறது.

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம் | Appeal To The Sinhalese People To Join Tamils

இது தொடர்பில் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் கொழும்பு கிளையின் செயற்பாட்டாளர் ரோல்ஸ்டன் வைமன் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண விரும்புகிறோம். ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு நாடாளுமன்றமும் பதவி விலகுவதே ஒரே தீர்வு. பின்னர் அனைத்துக் கட்சிகளின், குறிப்பாக நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் பிரதிநிதித்துவத்துடன் இடைக்கால அரசாங்கத்திற்குச் செல்லுங்கள், இந்த பாரிய அரசியல் மோதலைத் தீர்க்கக் கூடிய வகையில் விரைவில் தேர்தலை நடத்துங்கள்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தென்னிலங்கை மக்கள் உணராததால், வடக்கு, கிழக்கு மக்களின் குரல்கள் இன்று காலிமுகத்திடல் மைதானத்தில் கேட்கவில்லை.

1971ஆம் ஆண்டு எழுச்சியின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்களைப் பிரதமர் சிறிமாவோ விடுவிக்க வேண்டும் எனக் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் தெளிவாகக் கோரியிருந்தது, இன்றும் தமிழ் கைதிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US