சீன அமைச்சரின் வாகன பேரணிக்கு இடையூறு! பகிரங்க மன்னிப்பு கோரிய இளைஞர்
சீன பாதுகாப்பு அமைச்சரை ஏற்றிய வாகன பேரணிக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தான் மேற்கொண்ட செயலுக்கு அவர் பொலிஸாரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய குறித்த இளைஞர், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், அரசாங்கம் மற்றும் பொலிஸாரிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த இளைஞருக்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
முக்கிய பிரபு ஒருவரின் வருகைக்காக வீதிகள் முடக்கப்படுவதற்கு, 31 வயதான இளைஞர் ஒருவர் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கடந்த 27ஆம் திகதி பொரளை சந்தியில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணிக்கு இவ்வாறு வாகனங்களில் ஒலி எழுப்பப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.