குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையான அனுருத்த பண்டார, திலான் சேனாநாயக்க
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் அனுருத்த, திலான்
காலிமுகத்திடல் மக்கள் போராட்ட செயற்பாட்டளர்களும், சமூக ஊடக செயற்பாட்டளர்களுமான அனுருத்த பண்டார மற்றும் திலான் சேனாநாயக்க இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தனர்.
வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் இன்றைய தினம் காலை பத்து மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நிலையில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோகோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.