கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தனது தந்தையை தேடி அலையும் குழந்தைகள் (VIDEO)
அனுராதபுரத்தில் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளினால் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வழிக்காட்டலில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு,கிழக்கில் இருக்கின்ற தாய்மார்கள் தங்களுடைய உறவுகளை தேடி 2000 நாட்களாக வீதியிலேயே காத்திருக்கும் நிலையில், இந்த போராட்டத்திற்கு விடை தெரியாது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்.