ஆட்சியை தக்கவைக்கவே கஜேந்திரகுமாரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது: அநுர எம்.பி குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lanka
By Rakesh Aug 28, 2023 02:12 PM GMT
Report

"மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குருந்தூர்மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவற்றின் அங்கங்களாகும். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொரளை தொகுதி கூட்டத்தில் நேற்று(28.08.2023) பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆட்சியை தக்கவைக்கவே கஜேந்திரகுமாரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது: அநுர எம்.பி குற்றச்சாட்டு | Anurakumara Dissanayake Borella Meeting

அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

"2005 இல் ரணிலும், மகிந்தவும் அரசியல் எதிரிகள் என்றனர். 2010 இலும் இருவருக்கிடையிலும் போட்டி என்றனர். 2015 இலும் இரு அணிகளாகவே போட்டியிட்டனர்.

2019 இல் இரு அணிகளில் இருந்தனர். ஆனால், 2023 இல் இணைந்து ஆட்சி அமைந்துள்ளனர்.இதுதான் இவர்களுக்கிடையிலான அரசியல் டீல். பிளவுபட்டிருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். எனினும், உள்ளுக்குள் இணக்கம் இருக்கும்.

2005 இல் போரை முடிப்பது யார் என்றும், 2010 இல் போரை முடித்தது யார் என்றும் பிரசாரம் இடம்பெற்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் சர்வாதிகாரமா, ஜனநாயகமா எனப் பிரசாரம் இடம்பெற்றது. 2019 இல் தேசிய பாதுகாப்பு பற்றி பேசப்பட்டது. இதன்மூலம் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் மூடிமறைக்கப்பட்டன.

ஆட்சியை தக்கவைக்கவே கஜேந்திரகுமாரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது: அநுர எம்.பி குற்றச்சாட்டு | Anurakumara Dissanayake Borella Meeting

மக்கள் இன்று உண்மையை உணர்ந்துள்ளனர். நாட்டில் இரு பிரதான முகாம்கள்தான் உள்ளன. ஒன்று தேசிய மக்கள் சக்தி, அது மக்கள் ஆட்சிக்கான சக்தி. மற்றைய முகாம் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அணி. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால்தான் நாடு முன்னேறும்.

இன்று இனவாதத்தைத் தூண்டுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீடு சுற்றிவளைக்கப்படுகின்றது. குருந்தூர்மலை பிரச்சினை வருகின்றது. இவற்றைத் தோற்கடிக்க வேண்டும்.

அனைத்து மக்களும் சம உரிமையை அனுபவிக்கும் வகையில் அமைதியான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு." என தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US