அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம்!மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை
இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த சுயாதீன விசாரணைக்காக, மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் அலி சப்ரி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
லொஹான் ரத்வத்த, வெலிக்கடை சிறையில் அத்துமீறி பிரவேசித்தமை மற்றும் அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சுயாதீன விசாரணைகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையிலேயே முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.