சர்வதேச ஆதரவுடன் ரணிலை விசாரிக்க திட்டமிடும் அநுர அரசு
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெறுவதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர விவகாரத்துக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார்.
பட்டலந்த ஆணைக்குழு
எங்கள் முதன்மை கவனம் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றில் உள்ளது.
தென்னாப்பிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தைப் போலவே, முக்கிய குற்றவாளிகள் சட்ட அமைப்பு மூலம் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ரணிலின் செயல்களுக்குப் பொறுப்பேற்கவும், இந்தக் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும் சட்டத்திற்குள் சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நாங்கள் நடத்துவோம்,
அது அவர்களின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் கூட நடைபெறும்." என்றார்.
இதற்கிடையில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தை எதிர்வரும் நாடாளுமன்ற நாளில்இரண்டாவது நாளாக நடத்துவதற்கு இன்று (10) சபை ஒப்புக்கொண்டது.
மேலும், நாடாளுமன்றம் மே 8 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri