அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரத்தில் அத்துமீறி செயற்படும் ஊடகங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து பொலிஸ் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொலிஸ் எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'பி' அறிக்கை
இதன்படி, அனுராதபுரம் சம்பவம் தொடர்பான ‘பி’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் அறிக்கையின் சுருக்கம் சில ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன.
இதன் மூலம் அந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அந்த ஊடக நிறுவனங்களால் பாதிப்பு அல்லது அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில ஊடகங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல, மேலும் இந்த சம்பவத்திலும், சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிடுவது உட்பட விசாரணை மற்றும் எதிர்கால வழக்கு நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அந்த ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.
மேலும், குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குகள் பற்றிய தகவல்களை வெளியிடுவது தொடர்பான சில சட்ட விதிகள் உள்ளன.
தண்டனைச் சட்டக் கோவை
1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட தண்டனைச் சட்டக் கோவையின் 365 ஏ பிரிவு இந்த பிரிவின்படி, பின்வரும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் எந்த தகவலையும் அச்சிடுவது அல்லது வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க குற்றத்தின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை ஆதரித்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டத்தின் 20 ஆம் பிரிவின்படி, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் அல்லது உளவாளிகளின் அடையாளங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தடை செய்யும் விதிகள் உள்ளன.
மேலும், குற்றவியல் விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை சட்ட வரம்புகளை மீறி வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதன் மூலம் தொடர்புடைய ஊடக நிறுவனத்திற்கு எதிராக டிலிக்ட் சட்டத்தின் கீழ் சிவில் வழக்கை தொடர முடியும்.
சில ஊடகங்கள் குற்றவியல் விசாரணைகள் தொடர்பான தகவல்களை எந்தவித அக்கறையும் இல்லாமல் வெளியிடுவதால், பின்வரும் பாதகமான சூழ்நிலைகள் ஏற்படுவதாக கவனிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதன் மூலம், அந்த பாதிக்கப்பட்டவர்கள் அசௌகரியம் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
பொலிஸார் தகவல் கொடுக்காமல் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அடையாள அணிவகுப்பு நடத்துவதில் தடைகள் ஏற்படுகின்றன.
அத்துடன், விசாரணைகள் பற்றிய தகவல்களை மிகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் விசாரணை செயல்முறைக்கு தடைகள் ஏற்படுகின்றன. விசாரணைகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சில தொழில்நுட்ப விடயங்களை வெளியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள் செய்வதற்கு மறைமுகமாக பங்களிப்பளிக்கப்படுகின்றது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |