தேசபந்து தென்னக்கோனின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல தேடப்பட்டு வரும் மேலும் பல சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேடப்படும் பலர்...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்திரமல்ல, கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மேலும் பலர் தேடப்படுகின்றனர்.
இவர்களை கைது செய்வதற்கென்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பொலிஸ் அதிகாரிகளும் அதில் அடங்குவர்.
இலங்கை பொலிஸ் துறை தங்களது பணியை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. இந்த விவகாரங்கள் தொடர்பில் உங்களுக்கேதும் மேலதிக தகவல்கள் தெரிந்தால் அதனை எமக்கு அறியப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.