ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

Jaffna Anura Kumara Dissanayaka SL Protest Northern Province of Sri Lanka
By Kajinthan Jan 28, 2025 12:54 PM GMT
Report

ஜனாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) ஊடக சந்திப்பை மேற்கொண்டு வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வை தரவில்லை.

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்து வருகின்றார்.

இந்தநிலையில், வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளை (29.01.2025) முதல் 31ஆம் திகதி வரை எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

குறிப்பாக எமது மூன்று நாள் போராட்டமானது 29 ஆம் திகதி நாளையதினம் பசுமை தானம் என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் ஆரம்பிக்கப்படுவதுடன், 30 ஆம் திகதியன்று கலைத்தூது கலையரங்கில் இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளது.

இறுதி 31 ஆம் திகதியன்று ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாக பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் உள்ள பட்டதாரிகளின் சார்பில் ஒலிக்கும் குரலாக இது நடைபெறும் எனவும் எமது இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

வேலைவாய்ப்பு

இதேவேளை, குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் கூறுகையில், வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு நாட்டின் கல்வி கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும்.

வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். அதற்குரிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதேநேரம் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம். மேலும் அரசாங்கம் உருவாகி சில மாதங்களே கடந்துள்ளது.

இந்த அரசாங்கமாவது எமக்கான தீர்வை தரும் என நாம் எதிர்பார்த்தோம். அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US