வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி
தையிட்டி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அதற்கு மாற்றுக்காணி வழங்கப்படலாம், இணக்கப்பாட்டோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம் என்று அரசத்தரப்பு கூறுகின்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், தையிட்டி விவகாரத்தில் தற்போதைய அரசின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் சன் மாஸ்டர் தெரிவித்தார்.
இலங்கையினுடைய ஒற்றையாட்சி சட்டமென்பது எப்பொழுதும் தமிழர்களுக்கு தமிழர்களுக்கு பாதுகாப்பை வழங்காது என்பதற்கு தையிட்டி விவகாரம் ஒரு சாட்சி. மாற்று காணிகளை வழங்குவோம் என்று அமைச்சர் சந்திரசேகரன் கூறுகின்றார்,
அவரின் வீட்டை எடுத்துக்கொண்டு வேறு வீடு தருகின்றோம் என்றால் அவர் ஏற்றுக்கொள்ளுவாரா?
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..