அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்! மஹிந்தானந்த
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் மிக விரைவில் நாடு பொருளாதார வீழ்ச்சியொன்றை சந்திக்கும் என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த எதிர்வு கூறலை வௌியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கத்தின் போக்குகளைப் பார்த்தால் நாடு மிக விரைவில் பொருளாதார வீ்ழ்ச்சியொன்றை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.

விரைவில் பொருளாதார வீ்ழ்ச்சி
இப்போதைக்கு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றவர்களே அதன் பின்னர் நாட்டைப் பொறுப்பெடுக்க வேண்டியிருக்கும்.
எனவே கண்டி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சிலிண்டர் சின்னத்துக்கு கூடுதலாக வாக்களித்து கூடுதல் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 13 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam