மீண்டும் சூடு பிடிக்கும் அரசியல் களம்!! அனுரகுமார எடுத்த சபதம் - செய்திகளின் தொகுப்பு
குறுகிய காலம் பதுங்கு குழியில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் தற்போது வெளியில் வந்து, தனது வழமையான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கோபம் மற்றும் எதிர்ப்பில் ராஜபக்ச குடும்பத்தையும் அரசாங்கத்தை பாதுகாக்கும் கவசம் போல் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,