கொழும்பு பேராயரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேற்று (23.09.2024) விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரை சந்தித்து நலம் விசாரித்ததுடன் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பேராயர் கா்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளை துரிதமாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
அனுரவின் வாக்குறுதி
அது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்துள்ளதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |