இணையும் ரணில் - சஜித்! நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை கூட்டப்பட்ட கட்சி கூட்டத்திலேயே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுக்கவுள்ளனர்.
புதிய கூட்டணி
மேலும், இந்த தீர்மானம் இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு எதிராக கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
