ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை
அமெரிக்க நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையின் 79வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செப்டம்பர் 24 புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் திசாநாயக்க பேச உள்ளார்.
முதல் உரை
அரச தலைவராக தனது முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உரையில், அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam