ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை
அமெரிக்க நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையின் 79வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செப்டம்பர் 24 புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் திசாநாயக்க பேச உள்ளார்.
முதல் உரை
அரச தலைவராக தனது முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உரையில், அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
