அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய அனுரகுமார திசாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது ருவிட்டர் செய்தியில் தெரிவித்ததாவது,
I continue to meet with a wide range of political representatives to encourage the SL government’s efforts to move toward sustainable, inclusive solutions to the economic crisis. Today, I met with @anuradisanayake to discuss the most urgent challenges facing Sri Lankans. pic.twitter.com/ZlED2CxPtA
— Ambassador Julie Chung (@USAmbSL) May 14, 2022
“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இன்று நான் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தேன். இதன்போது இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam