ஹிட்லராக மாறும் ஜனாதிபதி அநுர குமார..! அச்சத்தில் அரசியல்வாதிகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 22ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சட்டமூல திருத்தத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,