அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் 159 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சிற்றுண்டிசாலை நன்றாக உணவு அருந்தி செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் காலை உணவு, பகல் உணவு, மாலை தேநீர் என்பனவற்றை உட்கொண்டு இரவு மாதிவெலவில் அமைந்துள்ள அவர்களது அதிகாரப்பூர்வ இல்லங்களில் உறங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறானவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சினை தெரிவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாதத்திற்கு ஒரு தடவை நாடாளுமன்றிற்கு வந்து அரசாங்கத்தின் பிழைகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து சென்றால் போதும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றார்கள் எனவும் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எந்த நாளும் ஜனாதிபதி சொல்வதனை கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜனாதிபதி போதுமான அளவு பொய்களை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு பொய் சொல்ல இடமில்லாமல் போய்விட்டது அனைத்து பொய்களையும் இவர்களை கூறிவிட்டால் நாங்கள் என்ன பொய் சொல்வது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இனி எங்களுக்கு பொய் சொல்வதற்கு வழி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.