ரணிலின் ஆட்சியில் முக்கிய புள்ளியை பழிவாங்கிய அரசியல் பிரபலங்கள்
புதிய இணைப்பு
மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் திட்டத்தை ஜனக்க ரத்நாயக்க முன்வைத்ததால் அவர் பழிவாங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஜனக்க ரத்நாயக்க தொடர்பான செயற்பாடுகளுக்கு துணையாக நின்ற தரப்பினரின் பெயர்களை குறிப்பிட விரும்புகிறேன்.
முன்னாள் அமைச்சரவையில் இருந்த சமல் ராஜபக்ச, ஜீவன் தொண்டமான், மகிந்த ராஜபக்ச, காஞ்சன விஜயசேக்கர, நாமல் ராஜபக்ச போன்றோரே இதற்கு காரணம்.
இவை நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்து அப்போது நீக்கப்பட்ட விடயம்.
இங்கு இவர்கள் கிளீன் சிறிலங்கா திட்டத்தை விமர்சிக்கின்றார்கள். விமர்சனங்களுக்கு அப்பால் இவற்றை சுத்தப்படுத்துவதே எமது நோக்கம்.” என வெளிப்படுத்தினார்.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை(Donald Trump) விடவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) கூடுதலாக வேலை செய்துள்ளார் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் எனவும், பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் வரையில் ஆயத்தமாவதற்கு அவருக்கு கால அவகாசம் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு 75 நாட்கள் கால இடைவெளி காணப்பட்டதனால் ஆட்சிக்கு தேவையான அரச இயந்திரத்தை உருவாக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பிடம், ஜனாதிபதி அநுரகுமார பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் 75 நாட்களில் செய்யாத வேலைகளை ஜனாதிபதி அநுரகுமார 63 நாட்களில் செய்துள்ளார் என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
ட்ரம்ப் உலக சுகாதார ஸ்தாபனத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் போற்றக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் பிள்ளைகள் இன்று நாட்டின் முக்கிய ஆட்சிப் பொறுப்புக்களை வகிப்பதாகவும் அதனை வரவேற்க வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
