ஜனாதிபதி அநுர ஆசிரியர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆசிரியர்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சீ.பி ரட்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் செய்தியைக் கூட அனுப்ப முடியாது என ஜனாதிபதி அநுர கூறியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி அநுர, ஆசிரியர்களை மிகுந்த தாழ்வான நிலைக்கு சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
கல்வித் துறையில் ஆசிரியர்கள் தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் எனஅவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு வழிகாட்டும் முக்கிய பொறுப்பை ஆசிரியர்கள் வகிக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அண்மையில் ஜனாதிபதி எஸ்எம்எஸ் அனுப்பத் தெரியாதவர்களாக ஆசிரியர்களைப் பற்றி வெளியிட்ட கருத்து மிகவும் மோசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களையும், உபகரணங்களையும் பயன்படுத்துவதற்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி இவ்வாறு பேசுவது வருத்தம் அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை தரக்குறைவாக நடாத்துவது ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
