ரணிலின் வரவு செலவுத் திட்டத்தையே புதிய அரசாங்கமும் பின்பற்றும்
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கொள்கைகளுக்கு அமையவே புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வகுத்த கொள்கைகளுக்கு அமையவே தற்போதைய அரசாங்கமும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிப்பதில் கால தாமதம்
இந்த கொள்கைகளுக்கு புறம்பான வகையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தால் நாட்டு மக்கள் மீண்டும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் நாடு பாரிய அளவில் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் காலம் தாழ்த்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு காலம் தாழ்த்துவதால் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
