அநுர அரசின் வீழ்ச்சி..!! மனம் மாறியுள்ள அரச ஊழியர்கள்..
அரச ஊழியர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவு நிலையில் இருந்து அவர்கள் மாறியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம்(Akilaviraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வீழ்ச்சி..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் இரண்டு செய்திகளை வழங்கியுள்ளனர். ஒரு செய்தி அரசாங்கத்திற்கும் மற்றொன்று எதிர்க்கட்சிக்கும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட செய்தி என்னவென்றால், மக்கள் இனி அவர்கள் சொன்ன பொய்களால் ஏமாற போவதில்லை என்பதாகும். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்திருக்கும் செய்தி என்னவென்றால், எதிர்க்கட்சிகள் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால் மக்கள் அதைச் சுற்றி அணிதிரள்வார்கள் என்ற செய்தியாகும்.

இருந்த போதும் இந்தத் தேர்தல் முடிவால், அரசாங்கம் எதிர்காலத்தில் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசாங்கத்தின் வீழ்ச்சி இங்குதான் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் அரச அதிகாரிகள் மாறியுள்ளனர். அதனால் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை முறையாக செயல்படுத்த முடியாமல் போவது போன்ற ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கத்துக்கு நேரிடும் என குறிப்பிட்டார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri