உலக அழகி போட்டியில் தொடரும் வாய்ப்பை இழந்த இலங்கை அழகி
புதிய இணைப்பு
72ஆவது உலக அழகி போட்டியின் இறுதி சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அழகி அனுதி இழந்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அனுதி குணசேகரா தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லூடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான புள்ளிகளை பெற்ற போதிலும், அவர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
உலக அழகி போட்டி
இந்தியாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31) ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளது.
“மிஸ் வேர்ல்ட் 2025” கிரீடத்தை வெல்லும் நோக்கில் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு கட்டமும் கடந்த ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இந்தியாவில் நடைபெறும் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் போட்டி
உலக அளவில் நடத்தப்படும் 72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நமது நாட்டையும், மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


காணி நிலம் வேண்டும் பராசக்தி 20 மணி நேரம் முன்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri
