இராணுவ புலனாய்வு துறையில் திடீர் மாற்றம் : ஆரம்பமானது அநுர அரசின் அதிரடி ஆட்டம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி இலங்கை பலனாய்வு துறையில் மறு சீரமைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகையான மறுசீரமைப்பு மாற்றம் இலங்கை வரலாற்றில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதில்லை.
அந்தவகையில் புலனாய்வு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றது அநுர அரசு.
மக்கள் விடுதலை முன்னணி இன்று தேசிய மக்கள் சக்தியாக மாறினாலும் புலனாய்வு துறையின் மீது அவர்கள் நீண்ட நாள் வைத்த இலக்கின் அடைவு மட்டத்தை தற்போது அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி விரிவாக ஆராய்கின்றது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |