தென்பகுதியில் வடக்கு மாகாணம் குறித்து தேவையில்லாத அச்சம்! அநுரவின் விளக்கம்
வடக்கு மாகாணம் தொடர்பாக தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் ஒன்று தென்பகுதியில் நடப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்றையதினம்(02.09.2025) இடம்பெற்ற உலக தெங்கு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இனவாத அரசியலின் ஊடாக எந்தவொரு வகையிலும் சாதாரண மக்களுக்கு நன்மை ஏற்படாது. வடக்கில் இனவாதம் என்பது அரசியல் வாதிகளின் கருத்தாகும். தென்பகுதியில் மேலெழும் இனவாதமும் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.
இனவாதங்களுக்கு இடமில்லை
தோல்வி கண்ட சக்திகள் திரும்ப எழுச்சி பெறுவதற்காக இந்த இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். அரசாங்கம் எனும் வகையில் இனவாதங்களுக்கு நாம் இடமளிக்க போவதில்லை.
தென்பகுதியில் ஒரு அரசியல் வளர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து அவர்கள் வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சம்பவங்களை கவனித்து வருகின்றார்கள்.
யுத்தம் தொடர்பான தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
தேவையில்லாத அச்சம்
கொழும்பு நகரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. துப்பாக்கி சூடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அதனை சாதாரண தன்மையாக சிலர் கூறுகின்றனர். வடக்கில் அவ்வாறே நடந்தால் அது யுத்தம் வருவதற்கான முன் சந்தர்ப்பமாக கருதுவார்கள் வடமாகாணம் தொடர்பாக தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் ஒன்று தென்பகுதியில் நடக்கின்றது.
இவை அனைத்தையும் திட்டமிடுவது வடக்கு மாகாணத்தில் யுத்தம் வரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காக யுத்தம் வரும் சந்தர்ப்பத்தினை தடுப்பதற்காகவே எம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



