தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள் - தண்டனைகளை கடுமையாக்க கோரும் அந்தனிசில் ராஜ்குமார்

Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Bavan Jun 20, 2026 02:40 AM GMT
Report

 இலங்கை முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து விட்டன. இது போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(19.06.2026) ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி - அதிபர் உட்பட மூவர் கைது

பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி - அதிபர் உட்பட மூவர் கைது

அதிகரிக்கும் குற்றங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 17 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் தன்னுடைய 12 வயது மகளை ஆண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்திய காரணத்தால் அவர் அவமானம் தாங்க முடியாது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இது இலங்கை தேசத்துக்கு ஒரு பரிதாபகரமான செயலாக பார்க்கப்படுகிறது.

இதனை தடுக்காவிட்டால் சிறுவர் துஷ்பிரயோகத்தால் அந்த சிறுவர் மட்டுமல்ல அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான குற்றச் செயலை தடுப்பதற்கு அதி உச்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்.

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள் - தண்டனைகளை கடுமையாக்க கோரும் அந்தனிசில் ராஜ்குமார் | Antonysil Rajkumar Demands Tougher Punishments

அத்துடன், அந்தந்த பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் பிரஜாசக்தி தலைவர்கள், அந்த ஊரில் இருக்கும் தேவாலயங்கள் ஆலயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூடிய கவனம் செலுத்தி இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய் தந்தை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அல்லது தாய் இல்லாமல் தந்தையுடனும் தந்தை இல்லாது தாயுடனும் 18 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு இல்லாத சிறுவர்கள் இருக்கின்றனர்.

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள் - தண்டனைகளை கடுமையாக்க கோரும் அந்தனிசில் ராஜ்குமார் | Antonysil Rajkumar Demands Tougher Punishments

எனவே, இவர்களுடைய பாதுகாப்பில் கருத்தில் கொண்டு கிராம உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசத்தி உறுப்பினர்கள், கூடுதல் கவனம் செலுத்தி இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் பெண்களை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர்கள் உள்ளிட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்காக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.        

போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் சீர்திருத்த மசோதா தோல்வி

போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் சீர்திருத்த மசோதா தோல்வி

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: 70க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பாதிப்பு

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: 70க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பாதிப்பு


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US