அரசிற்கு எதிரானவர்கள் பொய் விமர்சனங்களை மேற்கொள்கின்றனர் - பூ.பிரசாந்தன்
நாட்டில் சேதனப்பசளை உற்பத்தி சிறப்பாக நடந்துவரும் நிலையில் விவசாயிகளும் இவ் உற்பத்திகளில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எமது மக்கள் இரசாயனமற்ற உணவுகளை உட்கொள்ள தயாராயுள்ளனர். இதற்கு விவசாயம் தொடர்பான அனைத்து உத்தியோகத்தர்களும் மக்கள் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின் சேதனப்பசளை உற்பத்தி சம்பந்தமாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னும் வாக்குறுதிகளாகவே உள்ளன. வாக்குறுதி வழங்க மக்கள் வாக்களிக்கவில்லை. எமது தலைவர் சந்திரகாந்தனுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளுக்காக அவர் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
எதிர்கால அரசியலுக்காகப் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு இரசாயன உணவுகளை மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் சிலர். மக்களின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை ஏற்படுத்தவேண்டுமே தவிர குழப்பக்கூடாது.
எதிர்காலத்தில் எமது சந்ததியினர் சிறப்பாக ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய முன்னெடுப்பிற்கு மக்கள் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.