யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் (Photos)
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை, மகாஜன கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் நேற்றைய தினம் (31.10.2022) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு
இந்நிகழ்வில், போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், பெரும்பாலான குற்றங்கள் போதைப்பொருள் பாவனையால் செய்யப்படுவதாகவும், அதனால் போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மத குருமார்கள், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித
குணரட்ன, பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
