பெருமளவான பக்தர்களின் பங்குபற்றலுடன் அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா
முல்லைத்தீவு(Mullaitivu) - கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழாவின் வேஸ்பர் திருப்பலி நேற்று(12) மாலை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திருவிழா திருப்பலியானது அருட்பணி டேவிட் அடிகளார் தலைமையில் இன்று(13.06.2024) ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
திருவிழா திருப்பலி
அத்துடன், திருவிழாவில் மறைக்கோட்ட குருக்கள், அருட்தந்தையர்கள் பங்குத்தந்தையர்கள், அருட்சககோதரிகள் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் அரச திணைக்கள அதிகாரிகளும் திருவிழாவில் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும், திருவிழா திருப்பலி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.