இஸ்ரேலின் முக்கிய நகரம் மீது தாக்குதல்
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள சேப்பாத் நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
லெபனானின் பெய்ரட் நகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்தே, இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் 30 ஏவுகணைகளையாவது அனுப்பியிருக்கலாம் என இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
குறித்த ஏவுகணைகளில் சிலது தடுக்கப்பட்டிருந்தாலும் குறைந்தது இரண்டு ஏவுகணைகயேனும் சேப்பாத் நகரை தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் கருத்து
தாக்குதலினால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் நான்கு அணிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
The scene of a rocket crash in Safed, victims of anxiety at the scene@guyvaron
— HoneyBadger? (@NewsCreature) September 27, 2024
Photo: Safed Municipality https://t.co/YvWaEpSmYG
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பெடுத்துள்ளது.

அத்துடன், லெபனான் மற்றும் காசாவின் மக்களை ஆதரிக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan